
சிவசக்திவேல் (சிசவே)
ஆன்மா மகிழ்வடையும் சங்கதிகளைக் கட்டுதலே ஆன்ம தேடலின் ஆரம்பம். அதுவே உங்கள் ஆன்ம நதி ஆன்ம சாகரத்தை சென்றடையும் முயற்சி.
ஆன்மா மகிழ்வடையும் சங்கதிகளைக் கட்டுதலே ஆன்ம தேடலின் ஆரம்பம். அதுவே உங்கள் ஆன்ம நதி ஆன்ம சாகரத்தை சென்றடையும் முயற்சி.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பிறந்தவர். பெற்றோர் தனலட்சுமி (தமிழ் ஆசிரியை) ராஜீ (காவல்துறை ஆய்வாளர்) ஆவர். பள்ளி இறுதி வகுப்பு வரை பாப்பாரப்பட்டியில் பயின்றவர். கோவையில் பொறியியற் கல்வி முடித்துக் கணினி துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். பணி நிமித்தமாகப் பல்வேறு அயல் நாடுகளுக்கும் சென்று வந்தவர். இவருக்குச் சிறுவயதிலிருந்தே இலக்கிய ஈடுபாடு தன் முதல் தமிழ் ஆசிரியை மற்றும் கவிஞரான தனது தாய் வழியாக வந்தது.
இவர் தமிழ் படைப்புலகின் பிதாமகர்கள் புதுமைப்பித்தன், கல்கி, லா.ச.ரா, கி.ரா, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்றவர்களின் எழுத்து ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு தமிழ் இலக்கியத்தின் மீது தன் நாட்டத்தைத் திருப்பியவர்.
இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், மற்றும் ஒரு வரலாற்றுப் புதினமும்( வலைப்பதிவாக வெளிவந்தது இன்னும் அச்சில் ஏறவில்லை) படைத்துள்ளார்.
ஆசிரியரின் பிற நூல்கள்
சிறுகதை:
1. தோணி (2023)
2. நெடுஞ்சாலை இரவு (2023)
3. ஆசானே, என்னை மன்னிப்பீராக ! (2025)
குறுநாவல்:
1. ஆங்கிலம் (2024)
சிறுகதை தொகுப்பு மற்றும் குறுநாவல்
மூன்று சிறுகதை தொகுப்புகள் மற்றும் ஒரு குறுநாவல்
Get advanced teaser copy from new releases!
Copyright © 2024 - 2025 Writer Sivasakthivel - All Rights Reserved.
Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles on any other medium and formats prior permission required from author. © 2024 - 2025 காப்புரிமை எழுத்தாளர் சிவசக்திவேல். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.